இந்தியா

பூபிந்தர் சிங்

பிரபல இந்தி பாடகர் பூபிந்தர்சிங் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2022-07-19 01:55 IST   |   Update On 2022-07-19 01:55:00 IST
  • பிரபல இந்தி பாடகர் பூபிந்தர்சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.
  • பூபிந்தர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பை:

பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங் (82), கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அவரது மனைவி மிதாலி தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News