நாடு முழுவதும் 13.05 ஆயிரம் ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?
- மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 5460.90 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் 157.68 ச.கி.மீ., ஆந்திராவில் 133.18 ச.கி.மீ., குஜராத்தில் 130.08 ச.கி.மீ., கேரளாவில் 49.75 ச.கி.மீ. பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மத்திய சுற்றுக்சூழல் அமைச்சகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வழங்கியுள்ள அறிக்கையில், நாட்டில் (மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்) 13 ஆயிரம் ச.கி.மீ. (13,05,668.1 ஹெக்டேர்) காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் அளவு டெல்லி, சிக்கிம், கோவை மாநிலங்களின் ஒட்டுமொத்த அளவைவிட அதிகமாகும்
அந்தமான், அசாம், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, சண்டிகார், சத்தீஸ்கார், தாதர்&நகர் மற்றும் டாமன்&டையு, கேரளா, லட்சத்தீவு, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், சிக்கிம், மத்திய பிரதேசம், மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதில் மார்ச் 2024 வரையிலான தரவுகளில், மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 5460.90 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 3620.9 ச.கி.மீ. பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் 863.08 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 575.54 ச.கி.மீ., அருணாச்சல பிரதேசத்தில் 534.9 ச.கி.மீ., ஒடிசாவில் 405.07 ச.கி.மீ., உத்தர பிரதேசத்தில் 264.97 ச.கி.மீ., மிசோரமில் 247.72 ச.கி.மீ., ஜார்க்கண்டில் 200.40 ச.கி.மீ., சத்தீஸ்கரில் 168.91 ச.கி.மீ. நிலங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 157.68 ச.கி.மீ., ஆந்திராவில் 133.18 ச.கி.மீ., குஜராத்தில் 130.08 ச.கி.மீ., கேரளாவில் 49.75 ச.கி.மீ. நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.