இந்தியா

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-08-30 04:49 GMT   |   Update On 2023-08-30 04:49 GMT
  • அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.
  • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாப்ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கதிரி நகரை சேர்ந்தவர் பாப் ஜான். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பாப்ஜான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகளை 3 மாதமாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

சிறுமியின் தாய் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனைக் கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.

டி.எஸ்.பி. லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாப் ஜான் தனது மகளை பலாத்காரம் செய்தது உறுதியானது.

போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாப்ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை அனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த பாப் ஜானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆந்திர அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News