இந்தியா

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் இடையே கடும் போட்டி: கருத்துக் கணிப்பு

Published On 2023-11-30 13:15 GMT   |   Update On 2023-11-30 13:23 GMT
  • தெலுங்கானாவில் இன்று மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
  • டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.

போபால்:

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது.

ரிபப்ளிக்: பாஜக 118-130, காங்கிரஸ் 97-107

டிவி 9: பாஜக 106-116, காங்கிரஸ் 111-121

ஜன் டிவி பாஜக: 100-123, காங்கிரஸ் 102-125

பி மார்க் பாஜக: 103-122, காங்கிரஸ் 103-122

சிஎன்என் பாஜக முன்னிலை

இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

Tags:    

Similar News