இந்தியா

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா

Published On 2024-03-09 15:47 GMT   |   Update On 2024-03-09 15:47 GMT
  • ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல்.
  • தேர்தல் ஆணைய அமர்வில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.

2027ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் திடீரென அருண் கோயல் பதவி விலகியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருண் கோயல் ராஜினாமாவை தொடர்ந்து தேர்தல் ஆணைய அமர்வில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News