இந்தியா

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராஜ்தாக்கரேயை சந்தித்த காட்சி.

ராஜ் தாக்கரேவுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு பின்னணி என்ன?

Published On 2022-09-02 02:34 GMT   |   Update On 2022-09-02 02:34 GMT
  • ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர்.
  • சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை :

ராஜ் தாக்கரேயை அவரது வீட்டுக்கு சென்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார். இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சிவசேனா கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்தது. இதில் ஷிண்டே அணி, பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவையும் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்கள் ராஜ் தாக்கரேயை சந்தித்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டே தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு சென்றார். விநாயகர் சதுர்த்தியையொட்டி முதல்-மந்திரி, ராஜ்தாக்கரே வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

எனினும் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராஜ்தாக்கரேயும் சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர் ஆவார். சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தாதரில் உள்ள சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மனோகர் ஜோஷி வீட்டுக்கும் ஏக்நாத் ஷிண்டே சென்று அவரை சந்தித்தார்.

Tags:    

Similar News