இந்தியா

ஹரியானாவில் அடுத்தடுத்த நாள் நிலநடுக்கம்: டெல்லியிலும் உணரப்பட்டது

Published On 2025-07-11 21:15 IST   |   Update On 2025-07-11 21:15:00 IST
  • ஹரியானாவில் நேற்று காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.
  • இன்று இரவு 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அரியானா மாநிலத்தில் இன்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவில் 3.7ஆக பதிவானது. அரியானாவில் இரண்டு நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. அரியானாவின் ரோஹத் மற்றும் பகதுர்கார்க் மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது.

நேற்று காலை 4.4 ரிக்டர் அளவில் ஜாஜ்ஜார் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி- என்சிஆர் பிராந்தியத்தில் உணரப்பட்டது.

Tags:    

Similar News