இந்தியா
மணிப்பூரில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இம்பால்:
மணிப்பூரில் உள்ள மாய்ரங் நகரத்தின் தென் கிழக்கு பகுதியில் நேற்று இரவு 11.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.