இந்தியா

தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை: ஜெய்சங்கர் விமர்சனம்

Published On 2024-04-05 09:19 GMT   |   Update On 2024-04-05 10:31 GMT
  • இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.
  • தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள் என்றார்.

புதுடெல்லி:

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

இந்நிலையில், தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா.சபை எங்களுக்கு சொல்ல தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள். எனவே அது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News