இந்தியா

எனக்கு ஆன்லைன் ரம்மி விளையாடத் தெரியாது: மகாராஷ்டிரா மந்திரி பேட்டி

Published On 2025-07-22 15:53 IST   |   Update On 2025-07-22 15:53:00 IST
  • மகாராஷ்டிராவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
  • உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் ) பிரிவு ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.

இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவார் அணியானது எதிர்க்கட்சி வரிசையிலும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அஜித் பவார் அணி ஆளுங்கட்சியிலும் அங்கம் வகிக்கின்றன. இதில் அஜித் பவார் துணை மந்திரியாக ஆக பதவி வகித்து வருகிறார். அஜித் பவார் அணியைச் சேர்ந்த மாணிக் ராவ் கோகடே வேளாண்துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கிறார்.

இதற்கிடையே, சட்டசபை நடந்துகொண்டிருக்கும்போது மாணிக் ராவ் கோகடே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது ரம்மி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே மாணிக்ராவ் கோகடே பதவி விலகவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மாணிக்ராவ் கோகடே சின்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எனக்கு ஆன்லைன் ரம்மி விளையாடத் தெரியாது. கேம் விளையாட ஒருவருக்கு OTP தேவை. மேலும் ஒரு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.

எனது மொபைல் போன் அத்தகைய விளையாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒருவர் சரிபார்க்கலாம்.

எனது திரையில் 10 முதல் 15 வினாடிகள் தோன்றிய ஒரு விளையாட்டைத் தவிர்க்க முயற்சித்தேன்.

ராஜினாமா கோரப்பட்டதற்கு என்ன நடந்தது என சொல்லுங்கள். நான் யாரையாவது துன்புறுத்தியிருக்கிறேனா? நான் ஏதாவது திருடிவிட்டேனா அல்லது விவசாயிகளுக்கு எதிராக முடிவு செய்துள்ளேனா? எனக்கு குற்றப் பின்னணி உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News