இந்தியா

கொல்கத்தாவில் டெங்கு காய்ச்சலுக்கு டாக்டர் பலி

Published On 2023-09-17 03:17 GMT   |   Update On 2023-09-17 03:17 GMT
  • மேற்குவங்காளத்தில் பருவமழை தொடங்கிய பிறகு பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
  • இந்த ஆண்டு மட்டும் டெங்கு பாதிப்பால் மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது.

கொல்கத்தா:

மேற்குவங்காளத்தில் பருவமழை தொடங்கிய பிறகு பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மேற்குவங்காள அரசு முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கொல்கத்தா நகரின் கர்பா பகுதியை சேர்ந்த கண் டாக்டர் தேபோயுதி சட்டோபாத்யாய் (வயது 28) டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். இந்த ஆண்டு மட்டும் டெங்கு பாதிப்பால் மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. 

Tags:    

Similar News