ஆடம்பர காரில் வந்திறங்கி மாஸ் காட்டிய 'வடா பாவ்' விற்கும் இளம்பெண்- வீடியோ வைரல்
- சந்திரிகா ஆடம்பரமான போர்டு மஸ்டாங்க் காரில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் விரைவில் பெரிய செய்தி காத்திருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் விற்பனை செய்யப்படும் நொறுக்குத்தீனி உணவு வகைகளில் ஒன்று 'வடா பாவ்'. குறிப்பாக தெருவோர கடைகளில் இவற்றின் விற்பனை அதிகளவில் நடைபெறும்.
டெல்லியில் உள்ள மோங்கோல்புரி பகுதியில் வடா பாவ் கடை நடத்தி வரும் இளம்பெண் சந்திரிகா தீட்சித் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். 'வடா பாவ் கேர்ள்' என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் தனது கடைக்கு அருகே சிறப்பு 'வடா பாவ்' திருவிழா நடத்தினார். அப்போது சாலையில் ஏற்பட்ட கூட்டத்தால் டெல்லி போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் தற்போது சந்திரிகா ஆடம்பரமான போர்டு மஸ்டாங்க் காரில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், காரை ஓட்டி வரும் சந்திரிகா கையில் வடா பாவுடன் இறங்கும் காட்சிகள் உள்ளன. அந்த காரின் மதிப்பு ரூ.70 லட்சத்திற்கு மேல் இருக்கும்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் விரைவில் பெரிய செய்தி காத்திருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.