இந்தியா

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் - ஒருவர் கைது

Published On 2025-08-20 09:48 IST   |   Update On 2025-08-20 09:48:00 IST
  • மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்றார்.
  • முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் முதலமைச்சரை கடுமையாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது,

இதில் முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. டெல்லி முதல்வர் தாக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். 

Tags:    

Similar News