இந்தியா
டிட்வா புயல்- பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தல்
- தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என அறிவிப்பு.
- விமானங்களின் நிலவரத்தை பயணிகள் இணையதளத்தில் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தல்.
டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையம் செல்வதற்கு முன், விமானங்களின் நிலவரத்தை பயணிகள் இணையதளத்தில் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட பல நகரங்களில் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உதவிக்கு 011-69329333, 011-69329999 என்ற அவசர கால கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.