இந்தியா

'கவர்னர் பதவி நீக்கப்படும்' - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

Published On 2024-04-06 11:39 GMT   |   Update On 2024-04-06 11:39 GMT
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை டி.ராஜா இன்று வெளியிட்டார்.
  • 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

பாராளுமன்ற தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா இன்று டெல்லியில் வெளியிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

* புதுச்சேரி, டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

* புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்

* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

* 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்கள் ஆகவும், சம்பளம் ரூ.700 ஆகவும் உயர்த்தப்படும்

* கவர்னர் பதவி நீக்கப்படும்

* சிஏஏ சட்டம் ரத்து

* மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்

* பிஎம் கேர்ஸ் நிதி விவரங்கள் வெளியிடப்படும்.

* சமூக நல மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்

* நிதி ஆயோக் குழு கலைத்துவிட்டு திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.

*நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.

* சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை

* நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் இயற்றப்படும்.

* பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்

Tags:    

Similar News