இந்தியா

டைனோசருக்கு ஏற்பட்ட நிலையே காங்கிரஸ் கட்சிக்கும்... ராஜ்நாத் சிங்

Published On 2024-04-12 12:16 GMT   |   Update On 2024-04-12 12:57 GMT
  • 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.
  • காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது.

மத்திய பாதுகாப்புத் மந்திரி ராஜ்நாத் சிங் இன்று உத்தரகாண்ட் மாநிலம் கவுசாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தற்போதில் இருந்து இன்னும் சில வருடங்களில் டைனோசர் போன்று அழிந்துவிடும் என அச்சப்படுகிறேன். 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.

தினசரி காங்கிரஸ் கட்சிக்குள் அடிதடி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது. ஒருவருக்கொருவர் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News