இந்தியா

அருணாச்சல பிரதேசம்: சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

Published On 2024-03-21 08:48 GMT   |   Update On 2024-03-21 08:48 GMT
  • அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
  • ஜூன் 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்லா:

இந்தியாவில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

பாராளுமன்ற தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அருணாச்சல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 34 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News