இந்தியா
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு
- கார்கே உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
- இதனால் அவருக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்தது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருபவர் மல்லிகார்ஜூன கார்கே.
இந்நிலையில், கார்கேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து, மத்திய அரசு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி, இனி 40 முதல் 50 கமாண்டோ படை வீரர்கள் கார்கேவை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
இசட் பிளஸ் என்பது மிக உச்சபட்ச பாதுகாப்பு பிரிவாகும். நாட்டின் மிக முக்கியமான நபர்களுக்கே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.