இந்தியா

370 சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோவில் கட்டுதல் நிஜமாகும் என காங்கிரஸ் ஒருபோதும் நம்பவில்லை: நாங்கள் செய்தோம்- பிரதமர் மோடி

Published On 2023-11-14 07:42 GMT   |   Update On 2023-11-14 07:42 GMT
  • செல்போன் தயாரிப்பதில் உலகளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
  • உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இது என்னுடைய உத்தரவாதம்.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் வருகிற 17-ந்தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று பெதுல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது "உலகளவில் செல்போன் தயாரிப்பதில் இந்தியா 2-வது மிகப்பெரிய நாடாகியுள்ளது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இது என்னுடைய உத்தரவாதம்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் ஆகியவை நிஜமாகும் என காங்கிரஸ் ஒருபோதும் நம்பியது கிடையாது. ஆனால், நாங்கள் அதை செய்துள்ளோம். மத்திய பிரதேச மக்கள் மத்தியில் பா.ஜனதா மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நம்பிக்கையும் பாசமும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

Tags:    

Similar News