இந்தியா

காங்கிரஸ், பிஆர்எஸ் எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லாத தீர்மான நோட்டீஸ் வழங்கினர்

Published On 2023-07-26 05:18 GMT   |   Update On 2023-07-26 07:39 GMT
  • பிரதமர் மோடியை பேச வைக்க இது ஒன்றே வழி என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த முடிவு
  • மக்களவையில் இரண்டு கட்சிகளின் எம்.பி.க்கள் கடிதம் கொடுத்துள்ளனர்

பா. ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதற்கான அனைத்து வேலைகளும் நேற்றே முடிவந்து விட்டன. இன்று அவை தொடங்கியதும் அதற்கான நகர்வுகளை காங்கிரஸ் தலைவர் எடுத்துச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.

Tags:    

Similar News