இந்தியா

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், சிராக் பஸ்வான் இதைச் செய்தால், முஸ்லிம்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஒவைசி கட்சி

Published On 2025-04-02 17:40 IST   |   Update On 2025-04-02 17:40:00 IST
  • வக்ஃபு மசோதா அரசியலமைப்பு எதிரானது. சட்டப்பிரிவு 14, 25 மற்றும் 26-ஐ முற்றிலுமாக மீறிவது ஆகும். இது அரசியலமைப்பு எதிரானது.
  • மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் சந்திராபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் சந்திராபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

இந்த நிலையில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் (AIMIM) தேசிய செய்தி தொடர்பாளர் வரிஸ் பதான் கூறியதாவது:-

இந்த மசோதா அரசியலமைப்பு எதிரானது. சட்டப்பிரிவு 14, 25 மற்றும் 26-ஐ முற்றிலுமாக மீறிவது ஆகும். இது அரசியலமைப்பு எதிரானது.

மக்களவையில் பாஜக-வுக்கு மெஜாரிட்டி இல்லை. அவர்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற விரும்பினால், அவர்களுக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் மற்றும் ஜெயந்த் சவுத்ரியிடம் இருந்து ஆதரவு தேவை. இவர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தால் இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் அவர்களை மன்னிக்கமாட்டார்கள்.

இவ்வாறு வரிஸ் பதான் தெரிவித்தார்.

Tags:    

Similar News