ஞானேஷ் குமார்- சாக்கு போக்கு சொல்லாதீர்கள்: கர்நாடகா சிஐடி-யிடம் ஆதாரங்களை வழங்கவும்- ராகுல் காந்தி
- எங்களுடைய ஆலந்து வேட்பாளர் மோசடியை வெளிக்கொண்டு வந்த பின்னர் FIR பதிவு.
- தலைமை தேர்தல் ஆணையரால் சிஐடி விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், systematic ஆக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால், ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சாக்கு போக்கு தேவையில்லை. கர்நாடக மாநில சிஐடி-யிடம் ஆதாரங்களை வெளியிடுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
எங்களுடைய ஆலந்து வேட்பாளர் மோசடியை வெளிக்கொண்டு வந்த பின்னர், உள்ளூர் தேர்தல் அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் தலைமை தேர்தல் ஆணையரால் சிஐடி விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக சிஐடி 18 மாதங்களில் ஆதாரங்களை கேட்டு 18 கடிதங்கள் எழுதியுள்ளது. அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விசாரணைக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக தேர்தல் ஆணையம் பலமுறை வேண்டுகோள் விடுத்தது. தலைமை தேர்தல் ஆணையர் அதை தடுத்துள்ளார்.
ஐ.பி., டிவைஸ் போர்ட்ஸ், ஓடிபி டிரையல்ஸ் போன்றவை மறைக்கப்பட்டன.
வாக்கு திருட்டு பிடிபடவில்லை என்றால், 6018 வாக்குகள் நீக்கப்படிருக்கும். எங்களுடைய வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சாக்கு போக்கு விளக்கத்தை நிறுத்தவும். இப்போதே கர்நாடகா சிஐடி-க்கு ஆதாரங்களை கொடுக்கவும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.