இந்தியா
ரூ.17,000 கோடி கடன் மோசடி: அனில் அம்பானி வீட்டில் சி.பி.ஐ. சோதனை
- 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்றது.
- மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அம்பானியும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உள்ளனர்.