பக்கத்து வீட்டுக்காரனுடன் படுக்கையில் இருந்த மனைவி.. ஆத்திரத்தில் ஆணுறுப்பை கடித்த கணவன்
- வேலைக்காக வெளியூர் சென்று வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
- ஆனால் வியாழக்கிழமை இரவே கணவர் வீடுதிரும்பினார்.
உத்தரப் பிரதேசத்தில் மனைவியை பக்கத்து வீட்டுக் காரருடன் படுக்கையில் பார்த்த கணவன் செய்த விபரீத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கான்பூரில் பாபுபூர்வா பகுதியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வரும் கணவன் வேலைக்காக வெளியூர் சென்று வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் விளையக்கிழமை இரவே கணவர் வீடுதிரும்பினார்.
அப்போது வீட்டில் படுக்கையில் தனது மனைவியுடன் பக்கத்துவீட்டு நபர் இருப்பதை கண்டு கணவர் ஆத்திரதமடைந்தார். அந்த நபர் அங்கிருந்த ஓட முயன்ற நிலையில் பெண்ணின் கணவன் அந்த நபரை பிடித்து அவரின் ஆணுறுப்பை பற்களால் கடித்துள்ளார்.
இதில் அந்த நபரின் ஆணுறுப்பில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த ரத்தத்துடன் பயத்தில் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தை நோக்கி ஓடி அடைக்கலம் புகுந்தார்.
போலீசார் அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.