இந்தியா

2010-க்குப் பிறகு வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து: கொல்கத்தா உயர்நீதிமன்றம்

Published On 2024-05-22 11:55 GMT   |   Update On 2024-05-22 11:55 GMT
  • புதிய சட்டம் 1993-ன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியல் தயாரிக்கப்படும்.
  • 2010-ம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் அப்படியே இருக்கும்.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்காளத்தில் 2010-க்குப் பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய சட்டம் 1993-ன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் மேற்கு வங்காள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் தயாரிக்கும். 2010-ம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் அப்படியே இருக்கும்.

2010-ம் ஆண்டுக்குப் பிந்தைய ஓபிசி பரிந்துரைகள் ரத்து செய்யப்படுகிறது. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஓபிசி சான்றிதழ் பெற்று ஓபிசி இடஒதுக்கீடு மூலம் வேலை பெற்றிருந்தால் அல்லது அதற்கான நடைமுறை சென்று கொண்டிருந்தால் அது ஒடதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களுடைய வேலையை பாதிக்காது இவ்வாறு மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை தங்களால் ஏற்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் ஆசிரியர்கள் நியமனம் செல்லாது என மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து மேற்கு வங்காள அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் மேற்கு வங்காள உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதித்தது.

Tags:    

Similar News