இந்தியா
மகாராஷ்டிராவில் தொடரும் பின்னடைவு: காங்கிரசில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்
- பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சராக பதவி வகித்தார்.
- அவரது விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சராக பதவி வகித்தவர் பாபா சித்திக். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான பாபா சித்திக் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக, பாபா சித்திக் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 48 வருடங்களாக பயணித்துள்ளேன். நிறைய விஷயங்களைச் சொல்ல நினைத்தாலும் அவற்றை சொல்லாமல் விடுவதுதான் நல்லது என பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விலகி வருவது அக்கட்சிக்கு கடும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.