இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு: மதுபான தொழில் அதிபர் கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2023-03-02 16:14 IST   |   Update On 2023-03-02 16:14:00 IST
  • சி.பி.ஐ. தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில் ஆம் ஆத்மி நிர்வாகி விஜய் நாயர், மனோஜ் ராய் உள்ளிட்ட 4 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.
  • மதுபான தொழில் அதிபர் அமன்தீப் தாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில் ஆம் ஆத்மி நிர்வாகி விஜய் நாயர், மனோஜ் ராய் உள்ளிட்ட 4 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி இருந்தார்.

இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேட்டில் பணபரிவர்த்தனை குற்றச்சாட்டில் மதுபான தொழில் அதிபர் அமன்தீப் தாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.

Tags:    

Similar News