இந்தியா

இமாசல பிரதேசத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2023-01-14 06:06 IST   |   Update On 2023-01-14 06:06:00 IST
  • இமாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இது 3.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

சிம்லா:

இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் கிழக்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 5.17 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் அரியானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டெல்லியில் உணரப்பட்டது.

வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News