இந்தியா

நிலநடுக்கம்

மிசோரமில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2022-07-26 21:50 IST   |   Update On 2022-07-26 21:50:00 IST
  • மிசோரமில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.

ஐசால்:

மிசோரம் மாநிலத்தின் சம்பால் பகுதியில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News