இந்தியா

அம்ருதா பட்னாவிஸ்

காந்தி தேசத்தின் தந்தை, பிரதமர் மோடி புதிய இந்தியாவின் தந்தை - அம்ருதா பட்னாவிஸ்

Published On 2022-12-21 21:58 GMT   |   Update On 2022-12-21 21:58 GMT
  • நமது நாட்டிற்கு தேசத்தந்தை என்றால் அது மகாத்மா காந்தி.
  • புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது பிரதமர் மோடி என்றார்.

மும்பை:

மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான இவர் பல்வேறு விழாக்களில் அதிகம் கலந்துகொள்வார்.

இந்நிலையில், துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்நாவிஸ், நமது நாட்டிற்கு இரு தேசத் தந்தைகள் இருக்கிறார்கள் என கூறினார்.

மேலும், நமது நாட்டிற்கு தேசத்தந்தை என்றால் அது மகாத்மா காந்தி. அதேபோல், புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என இந்தியாவுக்கு 2 தேசத்தந்தைகள் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News