இந்தியா

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு: கெஜ்ரிவால் அவசர ஆலோசனை

Published On 2023-11-06 11:23 IST   |   Update On 2023-11-06 11:24:00 IST
  • டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
  • ஆலோசனை கூட்டத்தில் காற்று சூழல் மந்திரி கோபால்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வருவது (488 தரக்குறியீடு) மோசமான நிலையை காட்டுகிறது. டெல்லியின் நியூ மோதி பாக் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 488 ஆக உள்ளது. பட்பர் கஞ்ச் பகுதியில் 471 ஆகவும், ஆர்.கே.புரத்தில் 466 ஆகவும் இருந்தது.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காற்று சூழல் மந்திரி கோபால்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News