இந்தியா

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவு

Published On 2023-09-13 10:41 GMT   |   Update On 2023-09-13 10:41 GMT
  • பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் தொடங்குகிறது. இது 22ம் தேதி வரை என மொத்தம் 5 அமர்வுகள் நடைபெறுகின்றன.

"சிறப்பு கூட்டத் தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் உரையாடல்களை எதிர்பார்க்கிறேன்," என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அவர், கூட்டத்தில் சிறப்புக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு வலிறுத்தும்.

கூட்டத்தில், சிறப்பு கூட்டத்திற்கான நோக்கம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு, மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News