இந்தியா

கேரளாவில் விமானம் மூலம் ரூ.56 லட்சம் தங்கம் கடத்தியவர் சிக்கினார்

Published On 2023-10-08 05:47 GMT   |   Update On 2023-10-08 05:47 GMT
  • கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
  • காசர்கோடு பேக்கல் பகுதியைச் சேர்ந்த தம்ஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் வழியாக அரபு நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கண்ணூர் சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது காசர்கோடு பேக்கல் பகுதியைச் சேர்ந்த தம்ஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், தனியாக அழைத்துச் சென்று உடமைகளை சோதனை செய்தனர். இதில் அவர் தாள் பெட்டிக்குள் ஓட்டி வைத்து 973.5 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.56 லட்சத்து 32 ஆயிரம் ஆகும்.

அதனை மீட்ட போலீசார், தம்ஜித்தையும் கைது செய்தனர். அவர் அபுதாபியில் இருந்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இதே விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து மட்டனூரைச் சேர்ந்த முசாபிர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ..49½ லட்சம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News