இந்தியா
பீகாரில் நடந்த கோர விபத்தில் 9 பேர் பலி: முதல் மந்திரி இரங்கல்
- பீகாரில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.
பாட்னா:
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பயணித்தனர்.
தேவ்காளி என்ற கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் முன்னே சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. அதன்பின் ஜீப்பும், பைக்கும் சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது மோதின.
இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பீகாரில் நடந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.