இந்தியா

செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பலி

Published On 2023-08-03 02:58 GMT   |   Update On 2023-08-03 02:58 GMT
  • தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர்.
  • சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக்கொண்டிருந்தாள்.

பெங்களூரு:

கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சானித்யா என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர். அந்த சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்த தம்பதியினர், பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை அணைக்காமல் விட்டுவிட்டனர்.

இதற்கிடையே அந்த சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அந்த வயரை தனது வாயில் திணித்து குழந்தை விளையாடியுள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் குழந்தையை தாக்கியது. இதில் சானித்யா பரிதாபமாக உயிரிழந்தாள்.

Tags:    

Similar News