புனே அருகே மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு
- தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து, பிம்ப்ரி- சின்ச்வாட் நகராட்சி ஆணையர் சேகர் சிங் கூறுகையில், "2.45 மணியளவில் தலவாடேயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு அழைப்பு வந்தது.
பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னும் மெழுகுவர்த்திகளை தொழிற்சாலை தயாரித்து வந்துள்ளது.
பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.
மேலும், "காயமடைந்தவர்கள் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக" ஆணையர் தெரிவித்தார்.