இந்தியா

செப்டம்பர் 3,4-ல் டெல்லியில் நடைபெறும் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

Published On 2025-08-22 23:01 IST   |   Update On 2025-08-22 23:02:00 IST
  • கடந்த 2017, ஜூலை 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது.
  • ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3, 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் கடந்த 2017, ஜூலை 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும், வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் ஆவார். அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போது, ஜி.எஸ்.டி. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பூஜ்யம் அல்லது 5 சதவீத வரி அடுக்கிலும், ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற பாவ பொருட்கள் 28 சதவீத வரி அடுக்கிலும் வருகின்றன.

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், 56வது ஜி எஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காலணி மீதான ஜி.எஸ்.டி.யும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News