இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் இரு சமூகம் இடையே துப்பாக்கிச் சூடு- 5 பேர் உயிரிழப்பு

Published On 2023-09-13 09:52 GMT   |   Update On 2023-09-13 09:52 GMT
  • துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
  • தாதியா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News