இந்தியா
காங்கிரஸ்

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து 31-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-27 04:43 IST   |   Update On 2022-03-27 04:43:00 IST
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து வரும் 31-ம் தேதி நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய பொதுச்செயலாளர்களுடன் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் தேசிய அளவிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் 31-ம் தேதி எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விலைவாசி இல்லாத பாரதம் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், ஏப்ரல் 7-ம் தேதி மாநில தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி, உம்மன் சாண்டி, முகுல் வாஸ்னிக், தாரிக் அன்வர், ரந்தீப் சுர்ஜிவாலா, அஜய் மாக்கன் மற்றும் பொருளாளர் பவன்குமார் பன்சால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News