இந்தியா
நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த என்ஜினீயர் மாணவர்

நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த என்ஜினீயர் மாணவர்

Published On 2022-03-14 05:24 GMT   |   Update On 2022-03-14 05:24 GMT
காதலியை பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள என்ஜினீயரிங் மாணவர் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
திருப்பதி:

ஆந்திரா மாநிலம் குண்டூர் அடுத்த பெத்த காகானியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரம்மம். அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இளம்பெண்ணும், பிரம்மமும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பிரம்மம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தித்து பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணை தனது வீட்டுக்கு வருமாறு பிரம்மம் அழைத்தார். முன்னதாக தனது நண்பர்களான வரப்பிரசாத், நரசிம்மராவிற்கு போன் செய்து தனது வீட்டில் தங்க வைத்திருந்தார்.

அப்போது பிரம்மம் வீட்டிற்கு வந்த இளம்பெண்ணை 3 பேரும் சேர்ந்து கை, கால்களை கட்டி போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி இளம்பெண்ணை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு வந்த இளம்பெண் தனக்கு நடந்த அநீதியை அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவரது பெற்றோர் பிசா டிஎஸ்பி சீனிவாசராவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள என்ஜினீயரிங் மாணவர் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News