இந்தியா
பட்டாசு ஆலையில் வெடி விபத்து

இமாசலபிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி- 12 பேர் படுகாயம்

Published On 2022-02-22 10:00 GMT   |   Update On 2022-02-22 10:00 GMT
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இமாசலபிரதேசம் உனா மாவட்டம் தஹ்லிவால் தொழில்துறை பகுதியின் பத்ரி கிராமம் அருகில் உள்ள குர்பாலாவில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பட்டாசுகளை பெட்டியில் வைத்து பேக் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் ஆலை முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 பேர் உனாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு- கேரளாவில் நாளை முதல் வனப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி
Tags:    

Similar News