இந்தியா
கேரள மாநில ஆளுநர்

முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை

Published On 2022-02-18 05:24 GMT   |   Update On 2022-02-18 05:24 GMT
முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து தமிழக- கேரள அரசுக்கு இடையில் பிரச்சினை இருந்து வரும் நிலையில், கேரள மாநில ஆளுநர் உரையில் இவ்வாறு இடம் பிடித்துள்ளது.
கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தினார். அப்போது, முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை கட்டப்படும். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தப்படாது என பேசினார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது இடம் பெற்றுள்ளது.

Tags:    

Similar News