இந்தியா
தீ விபத்து

தெலுங்கானாவில் தனியார் ஆஸ்பத்திரியில் தீ விபத்து

Published On 2022-02-01 06:16 GMT   |   Update On 2022-02-01 06:16 GMT
தெலுங்கானாவில் தனியார் ஆஸ்பத்திரியில் தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமானது.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் நிஜாம்பேட்டை குக்கட்பலி என்ற இடத்தில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. நேற்று நள்ளிரவு அந்த ஆஸ்பத்திரியின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ வேகமாக பரவியது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர் அதிர்ச்சி அடைந்து மற்றவர்களை உஷார் படுத்தினார். இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் பதறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். நடக்க முடியாமல் இருந்த நோயாளிகளை உறவினர்கள் கைகளில் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

பின்னர் அனைவரும் அருகில் இருந்த மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். தக்க சமயத்தில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமானது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

Tags:    

Similar News