செய்திகள்
பினராயி விஜயன்

தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் கேளிக்கை மையங்கள் திறக்கப்படும்- பினராயி விஜயன்

Published On 2021-11-05 03:34 GMT   |   Update On 2021-11-05 03:34 GMT
கேரளாவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் கேளிக்கை மையங்கள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரம்:

கேரள சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கேரளாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் (ஐ.டி.பார்க்) தங்கள் நிறுவனங்களை திறக்க விரும்புபவர்கள் அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கேளிக்கை மையங்கள் போன்ற வசதிகள் இல்லாததை குறையாக சுட்டிக்காட்டினர். இவற்றை உருவாக்க கேரள அரசு திட்டமிட்டது. ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அத்தகைய வசதிகளை இதுவரை அமைக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News