செய்திகள்
கோப்புப்படம்

ராஜஸ்தானில் இன்று 2,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-10-10 17:54 GMT   |   Update On 2020-10-10 17:54 GMT
ராஜஸ்தானில் இன்று 2,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பூர்:

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 2,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தானில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,908 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ராஜஸ்தானில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 21,354 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 1,33,918 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News