செய்திகள்
பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார பணியாளர்கள் (கோப்பு படம்)

இந்தியாவில் 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 640 ஆக உயர்வு

Published On 2020-04-22 08:49 IST   |   Update On 2020-04-22 08:49:00 IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984 ஆக உயர்ந்துள்ளது. 



கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1383 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3870  பேர் குணமடைந்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவாக 5218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 251 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2156 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 47  பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

Similar News