செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ராணுவம் அதிரடி

Published On 2019-05-22 03:56 GMT   |   Update On 2019-05-22 03:56 GMT
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் இன்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. 
Tags:    

Similar News