செய்திகள்

பிரதமர் மோடியுடன் சன்னி டியோல் சந்திப்பு

Published On 2019-04-28 13:31 GMT   |   Update On 2019-04-28 13:31 GMT
பா.ஜ.க.வில் இணைந்தவுடன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சன்னி டியோல் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். #SunnyDeol #Modi
புதுடெல்லி:

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி டியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.
 
தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க. வேட்பாளராக மதுரா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் சன்னி டியோல் சமீபத்தில் பா.ஜ.க.  கட்சியில் இணைந்தார். அன்றிரவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.



இந்நிலையில், சன்னி டியோல் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மோடி, ’சன்னி டியோலின் எளிமையும், தன்னடக்கமும் தன்னை வெகுவாக கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சன்னி டியோல் குர்தாஸ்பூர் தொகுதியில் வெற்றிபெற தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். #SunnyDeol #Modi #SunnyDeolmeetsModi #ModimeetsSunnyDeol 
Tags:    

Similar News