செய்திகள்

மூன்றாம்கட்ட பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64.66 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2019-04-23 14:25 GMT   |   Update On 2019-04-23 14:48 GMT
13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்ற மூன்றாம்கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64.66 சதவீதம் வாக்குகள் பதிவானது.
புதுடெல்லி:

நாட்டிலுள்ள 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மூன்றாம்கட்ட தேர்தல் நடைபெற்றது.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அசாம் மாநிலத்தில் 78.29% வாக்குகளும் பீகாரில் 59.97% வாக்குகளும் பதிவாகின. கோவாவில் 71.09% வாக்குகளும் குஜராத்தில் 60.21% வாக்குகளும் பதிவாகின. ஜம்மு-காஷ்மீரில் 12.86% வாக்குகளும் கர்நாடகாவில் 64.14% வாக்குகளும் பதிவாகின. கேரளாவில் 70.21% வாக்குகளும் மகாராஷ்டிராவில் 56.57% வாக்குகளும் பதிவாகின.

ஒடிசாவில் 58.18% வாக்குகளும் திரிபுராவில் 78.52% வாக்குகளும் பதிவாகின. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 57.74% வாக்குகளும் மேற்கு வங்காளத்தில் 79.36% வாக்குகளும் சத்தீஸ்கரில் 65.91% வாக்குகளும் பதிவாகின.



யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யில் 71.43% வாக்குகளும் டாமன் மற்றும் டியூ-வில் 65.34% வாக்குகளும் பதிவாகின.

‏அவ்வகையில், மேற்கண்ட தொகுதிகளில் இன்று ஒட்டுமொத்தமாக 64..66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #voterturnout
Tags:    

Similar News