செய்திகள்
வயநாடு தொகுதியில் நிர்மலா சீதாராமன் தீவிர பிரசாரம்
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். #NirmalaSitharaman #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
திருவனந்தபுரம்:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார்.
அங்கு தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளார் துஷார் வெள்ளப்பள்ளியை ஆதரித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சுல்தான் பத்தேரி நகரச் சாலைகளில் வாகனத்தில் சென்று அவர் மக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். #NirmalaSitharaman #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi